prabasonyuvaraj.com
Monday 12 March 2012
Wednesday 7 March 2012
அம்புலிமாமா கதைகள்
1-: சுயநலமிக்க நண்பன்!
பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்வர் ஒரு அந்தணரின் மகனாகப் பிறந்தார். அவருக்கு
சத்தியானந்தர் என்ற பெயர் வைக்கப்பட்டது.
கொஞ்ச காலத்திற்குப் பிறகு அவரது பெற்றோருக்கு இன்னொரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு நித்தியானந்தன் என
பெயரிட்டனர்.
சகோதரர் இருவரும் வளர்ந்து பெரியவர்களானபோது அவர்களது பெற்றோர் காலமாகி
விட்டனர். இதனால் வாழ்க்கையில் விரக்தி
ஏற்பட, கங்கை நதியின் ஒரு கரையில்
சத்தியானந்தர் தம் குடிலை அமைத்துக்
கொண்டார். நித்தியானந்தன் எதிர்க் கரையில் தன் குடிலைப் போட்டுக் கொண்டு வாழ்ந்து வரலானான்.
ஒருநாள் பாதாள லோகத்திலிருந்து பாம்புகளின் மன்னனான மணிகாந்தன் என்பவன், மானிட வடிவில் பூலோகத்திற்கு வந்தான். அவன் கங்கை நதிக்கரையில் உலாவியவாறே நித்தியானந்தனின்
குடிலைக் கண்டான். சிறுவயதில் சன்னியாச
வாழ்வை மேற்கொண்ட நித்தியானந்தனைப் பார்த்து அவன் ஆச்சரியப்பட்டான். பிறகு அவனோடு பேசி தான் யாரென்பதைக்
கூறி அவனது நண்பனாகி விட்டான்.
இப்படியே தினமும் மணிகாந்தன் நித்தியானந்தனின் குடிலுக்குப் போய், அவனுடன் வெகு நேரம்வரை பேசி விட்டுத் திரும்பிச் செல்வான். சில சமயங்களில் மணிகாந்தன் தன் சுய உருவை
எடுத்துப் படம் விரித்து
நித்தியானந்தனின் மீது வெயில் படாமல் தடுத்தும் வருவான். இதனால் நித்தியானந்தன் மனதில் திடீரென ஒரு சந்தேகம் எழுந்தது.
என்னதான் நாகனான
மணிகாந்தன் நண்பன் என்றாலும், என்றாவது கோபத்தில் சீறித் தீண்டி விட்டால் பாம்பின் விஷத்தால் தான் உடனேயே இறக்கத்தானே வேண்டும்! இதை நினைக்க நினைக்க அவன் மனம் கவலைப்பட்டது.
கவலையால் உடலும் இளைக்கலாயிற்று. அவன் தன் தமையன்
சத்தியானந்தரைக் காணச் சென்றான்.
அவர் அவனைக்
கண்டதுமே “ஏன் தம்பி! இப்படி இளைத்துப் போய்
விட்டாய்?” என்று கேட்டார். நித்தியானந்தனும் தன் கவலைக்கான காரணத்தைக்
கூறினான். அப்போது சத்தியானந்தர் “நீ சொல்வதைப் பார்த்தால் நீங்கள் இருவரும் ஆருயிர் நண்பர்கள் என்று தெரிகிறது. ஆனால் அவனால் எந்த சமயமும்
ஆபத்து வரலாம் என நீ சந்தேகப்படுவது தெளிவாகி
விட்டது. அவனை வர விடாமல் செய்யலாமா அல்லது உன்னை அவன் காணாதபடி செய்யலாமா?”
என்று
கேட்டார்.
நித்தியானந்தனும் சற்று யோசித்து விட்டு “அவன் இங்கு வராமல்
இருந்தாலே எனக்கு மன நிம்மதி ஏற்படும். ஆனால் அவனிடம் ‘நீ வராதே’ என்று நான் எப்படிக் கூறுவது?” என்றான். சத்தியானந்தரும் “உன்னைக் காண வரும் போது
மணிகாந்தன் எவ்வித ஆபரணங்களை அணிந்து வருகிறான்?” என்று கேட்டார். நித்தியானந்தனும் “உடல் முழுவதும்
ஆபரணங்கள்
இருக்கும். எல்லாவற்றையும் விடப் பளபளஎன்று ஒரு வைரக்கல் அவனது கழுத்திலுள்ள ஆபரணத்தில் மின்னும்” என்றான்.
அப்போது சத்தியானந்தர் “இந்த முறை அவன் வரும் போது
அந்த வைரக்கல்லை நீ கேள்” என்று சொல்லி அனுப்பினார். இரண்டு நாட்களுக்குப் பின் மணிகாந்தன்
நித்தியானந்தனைக் காண வந்தான். அப்போது தன்
தமையனார் கூறியபடி நித்தியானந்தன் அவனிடம் அந்த வைரக் கல்லைத் தனக்குத் தரும் படிக் கேட்டான். மணிகாந்தன்
சட்டென அங்கிருந்து பாதாள
லோகத்திற்குப் போய் விட்டான்.
அடுத்த தடவை மணிகாந்தன் வாசலில் வந்து நிற்கும் போதே, நித்தியானந்தன்
அவனது கழுத்தில் உள்ள வைரக் கல்லைத் தனக்குக்
கொடுக்குமாறு கேட்டான். மணிகாந்தன் குடிலுக்குள் வராமலேயே திரும்பிப் போய் விட்டான். மூன்றாவது முறை மணிகாந்தன்
தன் குடிலை நோக்கி வருவது கண்டு, நித்தியானந்தன் அவன் எதிரே போய் நின்று “இரண்டு தடவை
உன்னிடமுள்ள
வைரக்கல்லைக் கேட்டேன். கொடுக்கவில்லை. இன்றாவது கொடுப்பாயா?”
கவலையால் உடலும் இளைக்கலாயிற்று. அவன் தன் தமையன் சத்தியானந்தரைக் காணச் சென்றான். அவர்
அவனைக் கண்டதுமே “ஏன் தம்பி! இப்படி இளைத்துப் போய் விட்டாய்?” என்று கேட்டார். நித்தியானந்தனும்
தன் கவலைக்கான காரணத்தைக் கூறினான். அப்போது சத்தியானந்தர் “நீ சொல்வதைப் பார்த்தால்
நீங்கள் இருவரும் ஆருயிர் நண்பர்கள் என்று
தெரிகிறது. ஆனால் அவனால் எந்த சமயமும் ஆபத்து வரலாம் என நீ சந்தேகப்படுவது தெளிவாகி விட்டது. அவனை வர விடாமல்
செய்யலாமா அல்லது உன்னை அவன் காணாதபடி செய்யலாமா?” என்று கேட்டார்.
நித்தியானந்தனும் சற்று யோசித்து விட்டு “அவன் இங்கு வராமல்
இருந்தாலே எனக்கு மன நிம்மதி ஏற்படும். ஆனால் அவனிடம் ‘நீ வராதே’ என்று நான் எப்படிக் கூறுவது?” என்றான். சத்தியானந்தரும் “உன்னைக் காண வரும் போது
மணிகாந்தன் எவ்வித ஆபரணங்களை அணிந்து வருகிறான்?” என்று கேட்டார். நித்தியானந்தனும் “உடல் முழுவதும்
ஆபரணங்கள் இருக்கும்.
எல்லாவற்றையும் விடப் பளபளஎன்று ஒரு வைரக்கல் அவனது கழுத்திலுள்ள ஆபரணத்தில் மின்னும்” என்றான்.
அப்போது சத்தியானந்தர் “இந்த முறை அவன் வரும் போது
அந்த வைரக்கல்லை நீ கேள்” என்று சொல்லி அனுப்பினார். இரண்டு நாட்களுக்குப் பின் மணிகாந்தன்
நித்தியானந்தனைக் காண வந்தான். அப்போது தன்
தமையனார் கூறியபடி நித்தியானந்தன் அவனிடம் அந்த வைரக் கல்லைத் தனக்குத் தரும் படிக் கேட்டான். மணிகாந்தன்
சட்டென அங்கிருந்து பாதாள
லோகத்திற்குப் போய் விட்டான்.
அடுத்த தடவை மணிகாந்தன் வாசலில் வந்து நிற்கும் போதே, நித்தியானந்தன்
அவனது கழுத்தில் உள்ள வைரக் கல்லைத் தனக்குக்
கொடுக்குமாறு கேட்டான். மணிகாந்தன் குடிலுக்குள் வராமலேயே திரும்பிப் போய் விட்டான். மூன்றாவது முறை மணிகாந்தன்
தன் குடிலை நோக்கி வருவது கண்டு, நித்தியானந்தன் அவன் எதிரே போய் நின்று “இரண்டு தடவை
உன்னிடமுள்ள
வைரக்கல்லைக் கேட்டேன். கொடுக்கவில்லை. இன்றாவது கொடுப்பாயா?” என்று கேட்டான்.
வீட்டிற்குப் போ!
பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில்
அங்கு சேனகர் என்ற மாபெரும் யோகியாக போதிசத்வர் அவதரித்திருந்தார். அதே சமயம் அந்நகரை
அடுத்து இருந்த ஒரு கிராமத்தில் பிச்சை எடுத்துப் பிழைக்கும் ஒரு பிராமணன் இருந்தான்.
ஒருநாள் அவன் ஏதோ ஒரு ஊரில் பிச்சை
வாங்கிக் கொண்டு காட்டு வழியே தன் ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான். அப்போது
ஒரு அசŽர வாக்கு "பிராமணா! நீ இன்று வீட்டிற்குப் போகாமல்
இருந்தால் இறந்து விடுவாய். நீ வீட்டிற்குப் போனாலோ உன் மனைவி இறப்பாள்" என்று
கூறியது.
பிராமணன் சுற்றிலும் பார்த்து யாருமே
இல்லாதது கண்டு தன்னை எச்சரித்தவன் யாராவது யட்சனோ கந்தர்வனோ அல்லது பிசாசோ என்று
சந்தேகப் பட்டான். அவன் மனத்தில் பயம் ஏற்படவே எப்படியாவது சட்டென வீட்டிற்குப் போய் விட வேண்டும்
என்று
அவன் துடித்தான். ஆனால்
வீட்டிற்குப் போனால் அவன் மனைவி இறந்து விடுவாளாமே. இந்த இக்கட்டான நிலையில் என்ன செய்வது
என்று தெரியாமல் அவன் தவித்தான்.
அவன் நகருக்குள் நுழைந்து ஒரு
வீதி வழியாகப் போன போது சேனகரான போதிசத்வர் மக்களுக்கு தர்மோபதேசம் செய்து
கொண்டுஇருப்பதைக் கண்டான். அவர் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருக்க மக்கள் அவரைச் சுற்றிலும் கூடி
இருந்தார்கள்.
இந்தப் பிராமணனும் கூட்ட த்தில்
சேர்ந்து கொண்டு போதிசத்வர் கூறியதைக் கேட்கலானான். போதிசத்வர் தம் பேச்சை
முடித்ததும் மக்கள் கூட்டம் கலைந்து சென்றது.
ஆனால்
அந்த பிராமணன் மட்டும் ஆடாமல் அசையாமல் மரம் போல நின்றான்.
அவனுக்குக் காட்டில் கேட்ட அசர வாக்கு
மிகுந்த குழப்பத்தைத்தான் உண்டாக்கி இருந்தது. எப்படிப் பார்த்தாலும் கணவன் மனைவி
இருவருள் யாராவது ஒருவர் இறந்தாக வேண்டும். இருவரும் இறக்காமல் இருக்க என்ன வழி என்று காணத்தான்
அவன்
துடித்தான்.
அவனைக்
கண்ட போதிசத்வர் தன்னருகே வரும்படி அவனுக்குச் சைகை செய்தார். பிராமணனும் அவரருகே போய் அவரை
வணங்கி
எழுந்து தலை குனிந்து
நின்றான். போதிசத்வரும் "நீ எதற்காக இப்போது வேதனைப் படுகிறாய்?" என்று கேட்டார். பிராமணனும் காட்டில் தன்னை
யாரோ எச்சரித்ததைக் கூறி
"இப்போது நான் என்ன செய்வேன்? வீட்டிற்குப் போனாலே என் மனைவி இறந்து விடுவாளாம். போகா விட்டாலோ நான் இறந்து
விடுவேனாம். இருவரும் இறக்காமல் இருக்க ஏதாவது வழி கூறுங்கள்" என வேண்டினான். அப்போது
போதிசத்வர் "நீ அந்த எச்சரிக்கையைக் கேட்கும் முன் என்ன செய்து கொண்டிருந்தாய்?" என்று கேட்டார். "நான்
ஒரிடத்தில் உட்கார்ந்து பையிலிருந்த உணவை எடுத்துச் சாப்பிட்டேன்" என்றான்.
"சரி. உன்னிடம் உணவு உள்ள பை
இருக்கிறது. ஆனால் நீர் குடிக்கப் பாத்திரம் எதுவும் இல்லையே. தண்ணீர் எப்படிக்
குடித்தாய்?"
என்று போதிசத்வர் கேட்டார். "எதிரே ஒரு
ஆறு இருந்தது. அங்கு போய்த் தண்ணீர் குடித்து விட்டு வந்தேன்" என்றான் பிராமணன்.
"அப்படியானால் நீ உணவு சாப்பிட்டு விட்டு பையை அதே இடத்தில் விட்டு விட்டு ஆற்றிற்கு
போனாய். அந்த பையில் உணவு மீதமாகி இருந்ததா?"
என்று போதிசத்வர் அவனைப்
பார்த்துக் கேட்டார்.
அவனும் "ஆமாம். பையில் இருந்ததில்
பாதியை நான் உண்டேன். மிகுந்ததை கட்டி எடுத்துக் கொண்டு போய் மனைவியிடம் கொடுக்கப் போகிறேன். இதோ அந்தப்
பை"
என்று காட்டினான். "நீ
நதிக்குப் போன போது பையின் வாயைக் கட்டவில்லையே" என போதிசத்வர் கேட்டார்.
"கட்டவில்லைதான்" எனப் பிராமணன் பதிலளித்தான்.
"அப்படியானால் நதியிலிருந்து திரும்பி
வந்துதான் பையின் வாயைக் கட்டினாய். கட்டு முன் அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்த்தாயா?" என்று அவர் கேட்டார்.
அவனும் "பார்க்கவில்லை. அப்படியே
கட்டி எடுத்து வந்தேன். இதற்குப் பிறகுதான் என்னை எச்சரிக்கும் குரல் என் காதில்
விழுந்தது" என்றான்.
போதிசத்வரும் "அப்படியானால் நீ ஆற்றில்
போய்த் தண்ணீர் குடித்த போது பை இருந்த இடத்தில் ஏதோ நடத்திருக்கிறது. அநேகமாக ஒரு பாம்பு
உன் பைக்குள் போயிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். அதை கவனித்த யட்சனோ தேவதையோ உன்னை
எச்சரித்தது.
நீ வீட்டிற்குப்
போகாவிட்டால் மறுபடியும் பசிக்கும் போது பையைத் திறப்பாய். அப்போது அதிலிருக்கும்
பாம்பு உன்னைத் தீண்டி விடும். நீயும் இறந்து போவாய். நீ பையைத் திறக்காமல் வீட்டிற்குப்
போனால் முதலில் பையை உன் மனைவியிடம் தான் கொடுப்பாய். அவளும் அதை ஆவலுடன் திறப்பாள்.
அப்போது பாம்பு
அவளைக் கடிக்க அவள் இறந்து
விடுவாள். இது தான் விஷயம்" எனக் கூறி அப்பையைத் தான் உட்கார்ந்திருக்கும்
இடத்தருகே வைக்கும்படி அந்த பிராம்மணனிடம் சொன்னார்.
பிராம்மணன்
அப்போதுதான் தன் பைக்குள்
பாம்பு புகுந்திருக்கிறது என அறிந்து திடுக்கிட்டான். போதிசத்வர் கூறியபடியே உடனேயே அவர்
பக்கத்தில் வைத்து போதிசத்வர் என்ன செய்கிறார் எனப் பார்க்கலானான்.
அப்போது
அவ்வழியே சென்ற ஒரு பாம்பாட்டியை
அவர் கூப்பிட்டு பையிலுள்ள பாம்பைப் பிடிக்கச் சொன்னார். அவனும் பையின் வாயை அவிழ்த்து சீறி வந்த
நல்ல பாம்பைப் பிடித்து கொண்டு போய் விட்டான்.
அதன்
பிறகு போதிசத்வர் பிராமணனிடம் "நீ இனிமேல் பயமில்லாமல் உன் வீட்டிற்குப் போகலாம்" என்றார்.
பிராமணன்
அவருக்குத் தன்
நன்றியறிதலைத் தெரிவித்து,
கவலையை விடுத்துத் தன் வீட்டிற்குச் சென்றான்.
Tuesday 6 March 2012
யார் கடவுள் சாயிபாபாவா?
”என்னை ஒரு மந்திரவாதியுடன்
ஒப்பிடாதீர்கள். என்னிடமிருப்பது தெய்வீக சக்தி,அதற்கு எல்லை என்பதே
கிடையாது. பூமியை வானமாகவும் வானத்தை
பூமியாகவும் மாற்றக்கூடிய சக்தி என்னிடமிருந்தாலும் நான் அப்படி செய்யவில்லை. ஏனெனில் அப்படி செய்ய எந்த அவசியமும்
இல்லை”
இதைச் சொன்னவர் வேறு யாருமில்லை…. மருத்துவ சாதனங்களின்
உதவியால் மூச்சு விட சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் சத்ய
சாயிபாபாதான்.
வானத்தை பூமியாகவும் பூமியை வானமாகவும் மாற்ற வேண்டிய அவசியமில்லாமல் இருக்கலாம். ஆனால், செயலிழந்து விட்ட அவரது
சிறுநீரகங்களையும் நுரையீரலையும் பழைய
நிலைமைக்கு மந்திரத்தின் மூலமாவது கொண்டு வர வேண்டிய அவசியம் அவருக்கிருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின்
ஆஸ்த்துமாவையும், கான்சர் கட்டிகளையும் முதுகுதண்டு
வடங்களையும் நொடிப்பொழுதில் ‘குணப்படுத்திய’ சாயிபாபா, உலகின் எந்த மூலையிலிருந்தாலும் கஷ்டப்படும் பக்தர்களுக்கு அருகில்
சென்று அரவணைத்தும் தடவிக்கொடுத்தும் ‘குணப்படுத்திய’ சாயிபாபா தன்னுடம்பை தானே குணப்படுத்திக்கொள்ளும் அற்புதத்தைக் காண அவரது பக்தர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரோ மருத்துவத்தின் அற்புதத்துக்காக
படுக்கையில்
காத்துக் கொண்டிருக்கிறார்.
சாயிபாபாவை பற்றி பெரிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை. வாயிலிருந்து லிங்கத்தை எடுப்பார். கண்ணிமைக்கும் நேரத்தில் செயினை வரவழைப்பார். மோதிரத்தை
கொடுப்பார், விரலுக்கு பொருந்தாவிட்டால் வாயில்
ஊதிக் கொடுப்பார். இவை எல்லாரும் ஒரு சில பெரிய மனிதர்களுக்கும் வெளிநாட்டு பக்தர்களுக்கும்தான். மற்ற சாதாரண பக்தர்களுக்கு அல்வா…மன்னிக்கவும் விபூதியை விரல்களிலிருந்து கொட்டுவார். ஆனால் அவர் யாருக்கும்
இதுவரை பூசணிக்காயை மட்டும் வாயிலிருந்து
எடுத்துக் கொடுத்ததில்லை. இப்போது புரிந்திருக்குமே…
ஆந்திரத்தைச் சேர்ந்த புட்டபர்த்தியின் சாயிபாபாதான் அவர். இவருக்கு 165 நாடுகளிலும் பக்தர்கள்
உண்டு. பல பல்கலைகழகங்களும் மருத்துவமனைகளும் உண்டு. கோடிக்கணக்கில் சொத்துகளும் உண்டு.
1926ஆம் ஆண்டு புட்டபர்த்தியில்
பிறந்த இவர் தனது 13ஆம் வயதில் மந்திர தந்திர சக்திகளை காட்டத்
துவங்கினார். பூக்களை வரவழைப்பது, இனிப்புகளை வரவழைப்பது என்பது வித்தைகளை காட்டினாராம். தன்னை சீரடி
சாயிபாபாவின் மறு உருவம் என்று
பிரகடனப்படுத்திக் கொண்டு தானே இறைவன் என்றும் சொல்லிக்கொண்டார்,அதனை நிரூபிப்பதற்காக பூக்களை
தரையில் வீசினாராம்., வீசிய பூக்கள் தெலுங்கு எழுத்துகளாக மாறி,
அவற்றை படித்தபோது
சாயிபாபா என்று இருந்ததாம்.. இதனை அவரது
பேராசியர் கஸ்தூரி சாயிபாபாவின் வாழ்க்கை வரலாற்றில்
குறிப்பிட்டிருக்கிறார். கஸ்தூரி அவர்கள் ஹாலிவுட் படங்கள் பார்ப்பதில்லை போலும். இல்லையேல் பூக்களை வானத்தில் வீசி
அவைகள் நட்சத்திரமாக மாறி பின்னர் தெலுங்கு
முதல் உலக மொழிகள் அனைத்திலும் சாயிபாபா என்று தென்பட்டதாக
அடித்து விட்டிருக்கலாம்.
1950ய-இல் சிறு ஆசிரமமாக
தொடங்கப்பட்ட பிரசாந்தி நிலையம் இன்று ஒரு சிறு நகரமாக வளர்ந்து நிற்கிறது. பல
நூற்றுக்கணக்கான ஓட்டல்கள், தங்குமிடங்களோடு, ஆரம்பப்பள்ளி,பல்கலைகழகங்கள், மருத்துவமனைகள் எல்லாம் சாயிபாபாவின்
பெயரில் பிரம்மாண்டமான நிறுவனங்களாக வளர்ந்திருக்கிறது.
அவரது பக்தர்கள் பட்டியலில் பல அரசியல் பிரபலங்கள் அடங்குவர். வாஜ்பேயியிலிருந்து முரளி மனோகர் ஜோஷி,பல உயர் பதவியிலிருக்கும் அதிகாரிகள், விஞ்ஞானிகள் என்று பலதரப்பினர் அடங்குவர். சாயிபாபா வெளிநாடுகளுக்குச் செல்வதில்லையே தவிர அங்கும் அவருக்கு
செல்வாக்குண்டு.
சாயிபாபாவுக்கு முன்பு மிகவும் நெருக்கமாக இருந்து தற்போது பிரிந்துவிட்ட
ஸ்வீடனைச் சேர்ந்த கானி லார்சன் கூறுகிறார்.
”நான் 1976-ஆம் ஆண்டிலிருந்து
சாயிபாபாவுடனிருந்தேன். அதற்கு முன்பு டிரான்சிடெண்டல் மெடிட்டிடேஷனில் ஆசிரியராக
இருந்தேன். அங்குதான் பாபாவை பற்றிய அறிமுகம் கிடைத்தது. எந்த விளம்பரங்களும் தேவையில்லை, பணம் எதும் கொடுக்கத்
தேவையில்லை, வந்து அமர்ந்து கடவுளின் அருளைப் பெற்றுச் சென்றாலே போதுமானது என்று மிகவும் எளிமையாக இருந்தது. புட்டபர்த்திக்கு வந்து சாயிபாபாவின் காலடியில் விழுந்தேன்.
அவர் காலடியிலேயே 21 ஆண்டுகள் கிடந்தேன். நான் அவருடைய பிரியத்துக்கும்
நெருக்கத்துக்குமுரியவனானேன். நான்கு வருட காலம் எங்களுக்கு அந்தரங்க உறவிருந்தது. ஒருமுறை நான் ஒரு பெண்ணை மணந்துக்கொள்ள விரும்பி
அவரையும் சாயிபாபாவிடம் அழைத்து வந்தேன்.
சாயிபாபா, அந்தப் பெண்ணின்
முகத்தில் அறைந்ததோடு “அவனை ஒருபோதும் தொடாதே,அவன் என்னுடையன், அவனை நான் மணம்
புரிந்திருக்கிறேன்”என்றும் கூறினார். நான் அவரது காலடியில் விழுந்ததோடு பிரியத்துக்குரிய எனது காதலியையும் பிரிந்தேன். ஏனெனில், அவரே கடவுளென்றும்
கடவுளுக்காக
எதையும் செய்யும் மனநிலையிலும் இருந்தேன்.”
1993-ஆம் ஆண்டு பிரசாந்தி
நிலையத்தின் ஆறு உட்குடியிருப்பாளர்கள் சாயிபாபாவின் படுக்கையறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். தாக்குதலில் இரண்டு பேர் இறந்துவிட்டதாகவும்
நான்கு பேர் கைகளில் கத்தி வைத்திருந்ததால் போலிசால்
தற்காத்துக்கொள்ள சுட்டபோது இறந்துவிட்டதாகவும் சொன்னார்கள். அனைவரது எதிர்காலத்தையும் அறியும் தெய்வீகச்
சக்தி படைத்த சாயிபாபா அப்போது உயிருக்கு பயந்து ஓடிவிட்டார். கொல்லப்பட்ட அனைவரும் சாயிபாபாவுக்கு
நெருக்கமானவர்கள்தான்.
அந்த நிறுவனம் ஒரு கொலைகார நிறுவனம். அது பணத்தை
வெளுக்கும் ஒரு நிறுவனம். ஆசிரமத்துக்கு
ஒருநாளைக்கு குறைந்தது பத்தாயிரத்திலிருந்து ஒரு லட்சம் பேர் வரைக்கும் வருவார்கள்.
ஒவ்வொரு வருடமும் குறைந்தது 55 மில்லியன் டாலர்கள் பக்தர்களிடமிருந்து
மட்டும் சாயிபாபாவின் டிரஸ்டுக்குக்
வரும். பல
அரசியல்வாதிகளிடமிருந்தும் பணம் டிரஸ்டுக்கு வருவதுண்டு. அதுமட்டுமில்லாமல், பல மந்திரிகள்,அதிகாரிகள், கோர்ட்டு நீதிபதிகள்,சிபிஐ அதிகாரிகள் என்று பலருக்கும்
பணம் பட்டுவாடா நடக்கும்.
அங்கிருக்கும் சூப்பர் ஸ்பெசல்
மருத்துவமனையைக்
கட்ட 108 மில்லியன் டாலர்கள் நிதிஉதவி செய்தது, ஹார்ட் ராக் கஃபே.
அந்த மருத்துவமனை பார்க்க ஒரு அரண்மனைபோலவே இருக்கும். அந்த மருத்துவமனையில் ஏழை இந்தியர்களுக்கு இலவசமாக மருத்துவம்
பார்க்கப்படும் என்று சொல்லிக்
கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் வெளியே வரும்போது
எத்தனை சிறுநீரகங்களுடன் முழுமையாக வருகிறார்களா என்பது கேள்விக்குறிதான்.
2000ஆம் ஆண்டு யுனெஸ்கோவும்
ஆஸ்திரேலியாவின் பல்கலைகழகமும் இணைந்து சத்ய சாயி டிரஸ்டின் குழந்தைகளுக்காக ஒரு செயல் திட்டத்தை
வகுத்திருந்தது. பின்னர் குழந்தைகளை பாலியல்
வக்கிரத்தோடு தவறாக பயன்படுத்தும் நோக்கமிருப்பதாகவும் சத்யசாயி
டிரஸ்டுக்கான உதவியை பின்வாங்குவதாகவும் யுனெஸ்கோ
அறிவித்துவிட்டு http://exbaba.com/shortnews/unesco.html விலகிக்கொண்டது.
“Behind the Mask
of the Clown” என்று
நான் எழுதிய புத்தகத்தின் மூலம் குறி வைத்து
விரட்டப்படுகிறேன். ஆபத்துகள் என்னை
சூழ்ந்திருப்பதால் எனது நாட்டை விட்டு வெளியேறி சைப்ரஸில் வசிக்கிறேன். ஆனால், எது வந்தாலும் நான் அமைதியாக
இருக்க மாட்டேன், ஏனெனில் சொல்லப்பட வேண்டியது ஏராளம் இருக்கிறது.”
இதுவே போதும். இதற்கு மேலும் நாம் எதுவும் சொல்லத்தேவையில்லாமல் விளங்கும். சாயிபாபா மற்றும் ஹோமோசெக்சுவாலிட்டி என்று
தேடினால் பலரது கதைகள் வந்து விழுகின்றன. இவை எல்லாம் சாயிபாபாவுக்கு
மட்டுமே சொந்தம் என்று நினைத்துவிடக்கூடாது.
இந்தியாவை மையமாக வைத்து உலகெங்கும்
எழுப்பப்படும்
ஆன்மீகக் கிளைகளில் இதுதான் நடக்கிறது.
ரவிசங்கரின் வாழும் கலை, அமிர்ந்தானந்தமாயியின்
கட்டிபுடி வைத்தியம், கல்கி பகவானின் ஒன்னெஸ்
கூட்டங்கள், பால் தினகரனின் ஜெபாலயம் என்று பக்தி இன்று ஒரு முக்கிய வியாபாரப்பொருள். ஆன்மீகமும் பக்தியும் ஒருகாலத்தில் ரிடையர்டான பெருசுகளின்
கூடாரமாக
இருந்தது போய் இன்று அந்த வியாபாரக்
கூடங்களின் வாடிக்கையாளர்கள் இளைஞர்கள்தான். பெரும்பான்மையினர் படித்த நடுத்தர வர்க்கத்தினர்தான்.
பரபரப்பு மிகுந்த அன்றாட வாழ்க்கையின் இரக்கமற்ற தன்மை, வேலை நிச்சயமற்ற
சூழல், பணிச்சுமை, குடும்பப் பிரச்சினைகள், பயமுறுத்தும்
எதிர்காலம், குழந்தைகளின் படிப்பு,போட்டி நிறைந்த உலகில்
நிலைநிறுத்திக்கொள்வதற்கு ஏற்படும் போராட்டங்கள்
மற்றும் மன அழுத்தங்கள் முன்னெப்போதும் இல்லாமல் இளைஞர்களை பாதிக்கின்றன.
வீட்டுக்கடனிலிருந்து, உயரும் விலைவாசியிலிருந்து,கிரெடிட் கார்டு…இதுபோக உறவுசார் பிரச்சினைகள்..முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குடும்பப் பிரச்சினைகள் அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
தான் இப்படி சுரண்டப்படுவதை உணராத இந்த இளைய
சமுதாயம் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது
போல உடனடித் தீர்வுகளை நோக்கி விரைகின்றனர்.
பெரும்பாலான நிறுவனங்களில் இன்று எட்டு மணிநேர வேலை என்பதே இல்லாமல் போயவிட்டது, எட்டு மணிநேரம் உழைப்பைத்
தாண்டி எத்தனை மணிநேரங்கள் உழைத்திருக்கிறோம் என்பதும்
இருநாளில் செய்துமுடிக்க வேண்டிய வேலையை ஒரே நாளில் செய்து முடிக்கவேண்டுமென்கிற முதலாளித்துவ நிர்பந்தமும்
மக்களை யோசிக்கவே விடாமல் செய்கின்றன. ஏதோ
தனக்கு மட்டும்தான் இந்த நிலை என்பதுபோல எண்ணி
குமைகிறார்கள்.
ஒருநாளின் குறைந்தபட்ச ஓய்வு என்பது கூட தற்போது சுருங்கிவிட்டது. ஓடிக்கொண்டேயிருப்பதுதான் நகர வாழ்வு என்பதாக மாறியிருக்கிறது.
தனது நிலைக்கான காரணத்தை உணர மறுக்கிறார்கள். கரும்பைப் பிழிவது போல சக்கையாக பிழிந்து நடமாடும் பிணங்களாக வாழ்பவர்கள் ஒன்று இயலாமையாலும்
மன அழுத்தம் தாங்காமல் தற்கொலையை நோக்கி
ஓடுகிறார்கள் அல்லது இந்த சாமியார்களின் மடத்துக்கு வருகிறார்கள்.
இந்த இன்ஸ்டண்ட் குருமார்களும், சகல பிரச்சினைகளுக்கும் தங்களிடம் தீர்வு இருப்பதாகக் கூறி
இவர்களை காந்தமாக ஈர்த்துக் கொள்கின்றனர். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் ரிலாக்ஸ் செய்தால் போதும், பிரச்சினைகள் தீர்ந்து போய்விடுமென்று
கூறி மயக்குகின்றனர். ஒரு வாரம் தியான வகுப்புக்கு நித்தியானந்தா ஐம்பதாயிரம் வரை வாங்கியதாக கூறுகிறார், அந்த வகுப்புக்குச் சென்று வந்தவரொருவர். ரவிசங்கரோ வாழும் கலையின் ஆரம்ப வகுப்புக்கு ஐந்தாயிரம் வரை வாங்குகிறார்.
தொலைப்பேசியில் பிரச்சினைக்காக ஜெபிக்க பணத்தை அனுப்பினால் போதுமென்கிறது பிரேயர் டவர்ஸ். அடித்தட்டு மக்களாக இருந்தாலும்
100 ரூபாயாவது கொடுத்தால்தான் உறுப்பினராக
முடியுமென்கிறார் மேல்மருவத்தூர் அம்மா. நமது தெருமுனையிலிருக்கும் கல்யாண மண்டபத்தில் நடத்தப்படும்
ஈஷா யோகா வகுப்பில் வந்து முடிகிறது,இந்த நீண்ட பட்டியல்.
இவர்கள் அனைவரும் சொல்வது, நல்லதையே பார்த்துப்
பழகுங்கள், கெட்டவற்றை நினைக்காதீர்கள், எந்த செய்தியிலும் நல்ல
பக்கத்தையே பாருங்கள், பொறுமையோடிருங்கள், உங்களுக்குள் இருக்கும் அமைதியைத் தேடிக் கண்டடையுங்கள், ”
என்று நீளும்
இந்த தத்துவம் கடைசியில் உண்டியலில் வந்து முடியும்.
முதலாளிகள் தேய்த்து அனுப்பும் பழுதான இயந்திரங்களுக்கு மசகு எண்ணெயை வார்த்து திருப்பி அனுப்புவதற்குத்தான் இந்த ஆன்மீக
சாமியார்கள் பயன்படுகிறார்கள். ஆளும் வர்க்கத்துக்கு சாமியார்களின் தயவு தேவை. சாமியார்களுக்கு தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்த அரசு
தேவை. அதனால்தான், ஆனந்தாக்களும் பாபாக்களும் வாழையடி வாழையாக தோன்றிக்
கொண்டேயிருக்கிறார்கள்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், நாம் அருந்தும் தண்ணீர் உட்பட படிக்கும் படிப்பு வரை இருக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கு ஆன்மீகம்
பதிலாகுமா? பிரச்சினைகளை மழுங்கங்கடிப்பதற்கு
வேண்டுமானால் ஆன்மீகம் உதவும். கொலைப்பழி இருந்தபோதும்
அவாள்கள் சங்கர மடத்துக்கு போகாமல் இருந்தார்களா என்ன? ஜெயேந்திரன் அம்பலமான பிறகும் சங்கர மடத்துக்கு மவுசு
குறையாமல்தானே இருக்கிறது!
அதனால்தான் சாயிபாபாவின் ஆசிரமத்தில் நிகழும் கொலைகளையும், குழந்தைகள் மீதான கொடுமைகளையும்
மூடிமறைத்து பாதுகாப்பு கொடுக்கிறது ஆளும் வர்க்கம். சாயிபாபாவின் ஆசிரமத்தில் மன்மோகன் சிங்க்குக்கு என்ன வேலை? இவரது தெய்வீக சக்தி இருக்கும் போது மருத்துவ
பல்கலைகழகங்களும் பொறியியலும் எதற்கு? தெய்வீக சக்தியையே
பயன்படுத்திக்கொள்ள முடியாதா?பூமியை வானமாகவும் வானத்தை பூமியாகவும் மாற்றக்கூடியவருக்கு, முக்காலமும் அறிந்தவருக்கு ஜப்பானில் நிகழ்ந்த சுனாமியை தடுத்து நிறுத்தியிருக்கலாமே!
இதோ, இப்போது உலகெங்கும் அவரது பக்தர்கள் அவருக்காக வேண்டியபடி இருக்கிறார்கள்.
இன்னும் சில பக்தர்கள், இது சாயிபாபாவின்
லீலைதானென்றும் அவர் விரைவில் குணமாகி
வருவாரென்றும் நம்புகிறார்கள். வேறு சிலரோ,
அவர் கடவுள்தான் என்றாலும் சாதாரண மனிதனுக்கு நேரும் முடிவை சந்திப்பதற்காகத்தான் அவரை அவரே காப்பாற்றிகொள்ள வேண்டாமென்று முடிவு செய்திருப்பதாகவும் தங்களைத்
தாங்களே தேற்றிக்கொள்கிறார்கள்.
பார்க்கப் பரிதாபமாக இருந்தாலும், ஆன்மீகம் செய்து வைத்திருக்கும் கோளாறு புரிகிறதா?
மக்களின் போராட்டங்களை அடக்க ராணுவத்தை குவிக்கும் அரசு
இந்த சாமியார்களின் ப்ராடுத்தனத்தால்
மக்கள் ஏமாற்றப்படுவதை தடுத்து நிறுத்த முடியாதா
என்ன?
முடியும். ஆனால் செய்யாது. பகுத்தறிவு பேசிய கருணாநிதி சாயிபாபா நலம் பெற்று எழ வேண்டுமென்று செய்தி அனுப்புகிறார். இது ஏதோ மனிதாபிமானத்தின்பாற்பட்டதல்ல. தேர்தல் காலத்தில் தமிழகத்தில்
இருக்கும் சாயிபாபா வாக்குகளை கவர் செய்த
மாதிரியும் ஆகும். கூடவே கருணாநிதி
குடும்பத்தில்
இருக்கும் பாப பக்தர்களை திருப்திப்படுத்தியது போலவும் இருக்கும்.
சாயிபாபாவின் மீதான கருணாநிதியின் அக்கறைக்கு
பொருளென்ன? அடிப்படையில் இருவரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களே! மக்களுக்கு தங்களது பிரச்சினைகளுக்குக் காரணமான சமூக அமைப்பின் மீது கோபம் வராமல் பார்த்துக்கொள்வதில் இருவரும் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள்
ஆன்மீகம் தனது பிரச்சினைகளுக்கு ஒருபோதும் மருந்தல்ல என்று மக்கள் உணரும்போதுதான் சாயிபாபாக்கள் மந்திரவித்தை மோசடிகளை
நிறுத்துவார்கள். மாறாக அப்போது சாமியார்கள்
மக்களை ஒடுக்கும் ஆளும் வர்க்கத்தின்
சர்வாதிகாரத்திற்கு
சாணக்கிய ஆலோசனை செய்யும் வேலைக்கு போய்விடுவார்கள். போக வைப்போம்.
Subscribe to:
Posts (Atom)